குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, September 21, 2019

சிந்து வெளி குயவர் பண்பாட்டு நகரம் கீழடி

          கீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி

 

 


 இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறும் மாறுகிறது. புதிய ஒளிப்பாய்ச்சும் கீழடி நாகரிக ஆய்வு முடிவுகள்.

 பண்டைய தமிழ் மக்களின் குலம்.. குடி என்பது சாதி சார்ந்தது / தீண்டாமை / சமூக ஏற்றத் தாழ்வு சார்ந்தது அல்ல... அது தொழில் மயம் ... பாரம்பரியம் சார்ந்தது ; தமிழியல் பண்பாடு என்பது வாழையடி வாழையாய் தலை முறைக்கும் .... குலம் / குடி வாயிலாக தொழில் நிபுணத்துவத்தைக் கடத்துவது ஆகும். அந்த அடிப்படையில் குலப் பெருமை & குடிப் பெருமை மிக்கவர்கள் தமிழர் ... அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை குலப் பெருமை ... குடிப் பெருமை பற்றிப் பேசுகிறார் .

இன்று உலக மைய / தாராள மய / நவீன தொழில் நுட்ப உலகியல் வாழ்க்கையில் எல்லாரும் எல்லாமும் செய்ய முடியும் எனும்போது குலம் ..குடி சார்ந்த தொழில் மற்றும் அதன் பாரம்பரிய கதைகள் தற்காத்துக் கொள்ளப்படாவிடில் சரித்திரம் இல்லாமல் போய் விடும். எடுத்துக்காட்டு

 தன் சரித்திரம் இழந்த எந்த இனமும் எழுச்சி பெறாமல் அடிமைப்பட்டு போகும் .
-- சற்குரு சகி வாசுதேவ் .

குயவு பெருமக்களின் சமூக நிலைபாட்டை குலைத்து & சரித்திரத்தைப் புரட்டிப் போட்டு , பொய்யும் புரட்டுமாக பிராடு செய்யும் வன்மம் நிறைந்த வல்லாதிக்க மக்கள் மத்தியில் ஒவ்வொரு தமிழர்தம் குலத்துக்கும் ... குடிக்கும் குலப் பெருமை & குடிப் பெருமை இருக்கிறது என்பதை புலப்படுத்தும் நோக்கத்துக்காகதான்

தமிழ் பேசிய மக்கள் நிறைந்த சிந்து சமவெளி தமிழர் நாகரிகம் என்றாலும் அதனிலும் ஒரு படி நுணுக்கி ஆய்ந்து உட்புகும்போது அது குயவு பெருமக்களின் உழைப்பு சார்ந்த மண் பாரம்பரியம் என்பதனை குயவு பெருமக்கள் ''ஆண்ட'' மண்ணே புதைந்திருந்து தன்னை தன் மக்களின் குலப் பெருமைக்கு & குடிப் பெருமைக்கு என 8000 ஆண்டுகளுக்குப் பின் விரும்பி புலப்படுத்தும்போது சிந்து வெளி ஆய்வு குழுமம் பூமித்தாயின் உயிர்ப்பின் நோக்கம் அறிந்து சிந்து சமவெளி குயவர் பண்பாட்டு நாகரிகம்

 

 

 

சிந்து வெளி குயவர் பண்பாடு நகரம் .
பகுதி 2 / 2
சிந்து வெளி நாகரிகம் குயவு பெருமக்கள் பண்பாட்டு நகரம் ; அது பண்டைய தமிழ்க் குயவு மக்களின் பெருந்தொழில் நகரம் ; சங்க கால தமிழ் & தமிழர் வாழ்வியலுக்கான ஒரு முன் மாதிரி காலக் கண்ணாடி .
சிந்து நதிக்கரைகளின் மணமண் வளம் குயவு , செங்கல் தொழில் சார்ந்தது ; செங்கல் தொழிற் தளம் , செங்கற்கள் , செங்கல் சூளை என குயவு மகத்துவம் மிக்கது ;பண்டைய களிமண் பொம்மை வகை தொழில் வகைகளுக்கான தலைமை அகம் ... இல்லம் .. வீடு ; மட்பாண்ட வகைகளின் மொத்த குத்தகையின் வண்ணமயம் போன்ற கலைக்கூடம் எனப்படுவது சிந்து வெளி நாகரிகம் .
சிந்து வெளி குயவு பெருந்தொழில் பண்பாட்டு நகரமெனில் ஏனைய குலத் தொழில் மக்களை.. எதனால் புலப்படுத்துகிறது ? ; எப்படி அறிய முடிகிறது ? என்ற கேள்வி பிறக்கிறது !.
ஆம் , அங்கு புழங்கிய குறியீடுகள் பற்பல குலங்கள் பெயர்களை அடையாளம் காட்டுகின்றன. அங்கு புழங்கிய குறியீடுகள் குலத் தொழில்களின் பல்வேறு வகைகளை அம்பலப்படுத்துகின்றன ; தொல்லியல் எச்சங்கள் என சில பல வேறு பொருட்களின் சுவடுகள் கொடுக்கின்றன.
குறியீடுகள் வழி பல்வேறு குல மக்களை & பற்பல தொழில்களை , தொழில் எச்சங்களை அடையாளம் காட்டி ஒப்புர ஒழுகு , ஊருடன் கூடி வாழ் , கூடி வாழ்ந்தால் கோடி நன்மை எனும் சமூகவியல் கோட்பாடு / சாராம்சம் கொண்ட சிந்து சமவெளி குயவர்கள் பண்பாடு / நாகரிகம் எனப்படுவது ஏன் ?
தமிழர் பெருமக்களே ...

~குயவு தொழில் பண்பாடு குறிப்பது சிந்து வெளி ; அது '''சிந்து நதிக்கரை''' சார்ந்தது.
~'''சிந்து சமவெளி நாகரிகம்''' எனப்படுவது சிந்து நதிக்கரையும் கடந்தது ;
The civilization covered an area of around 1.3 million square kms from Manda in the North to Daimabad in the South and from Suktagendor in the West to Alamgirpur in the East.
மொத்த இந்தியாவில் எத்தனை பாகம் என்று கணக்குப் போட்டால் சற்று எளிதாக விளங்கும் ! ; (துல்லிய ஆய்வு வேண்டும் !) ; தற்சமய நிலவரப்படி '1.3 million square kms' ; இப்போது இன்னும் பரப்பு பெருகி இருக்க வாய்ப்புண்டு !.
உலகின் 5 நாகரிகங்கள் எனப்படும் எகிப்து , சுமேரிய - மேசபோடேமியா , சீனா , சிந்து ஆகியவற்றில் உலகிலேயே மிகப் பெரிய நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் ;
பாகிசுதானின் - பலுசிசுத்தான் , (sinth) சிந்த் , ச்சம்பு காசுமீர் , பஞ்சாப் மற்றும் ஆப்கானிசுதான் நாட்டின் குறிப்பிட்ட எல்லை தனையும் சிந்து சமவெளி நாகரிகம் உள்ளடக்கியது ;
இந்தியாவிலோ குசராத் உள்ளடக்கி 5 மேற்பட்ட மாநிலங்களை தன்னகதே உள்வாங்கி கொண்ட சிலவற்றைக் கற்பனை செய்து பார்ப்போமா ? ;

- ராசசுதான் Rajasthan,
- குசராத் Gujarat
- அரியானா Haryana
- உத்தரபிரதேசம் Western Uttar Pradesh
-வட மகராசுதிரா Northern Maharashtra(1976-79)

The Harrappan culture was spread over the many part of India like Sindh, Baluchistan, Punjab & Haryana, Western Uttar Pradesh, Jammu, Rajasthan, Gujarat and Northern Maharashtra.


அதுமட்டுமா ...
பாகிசுதானின் - சிந்துநதி முதன்மை நதி உட்பட 11 கிளை நதிகள் , இணை நதிகள் , உப நதிகள் , உப துணை நதி இப்படியாக பட்டியல் நீளும் வண்ணம் , இன்னும் இன்னும் என விரிந்து யமுனை , கங்கை நர்மதை , ஆரவல்லி முனைகளையும் தொடும் அளவுக்கு அத்தனை மாநிலங்களின் நில பகுதிகளை உள்ளடக்கிய பெருமை கொண்டது சிந்து சமவெளி நாகரிகம்.
As of 2008, over *1000 Indus Valley Civilization sites have been discovered
616 sites are in India
406 sites are in Pakistan
while some sites in Afghanistan
(* தற்போது இன்னும் அதிகம்).

2008 -இல் ,1000-க்கு மேலான Indus Valley Civilization தளங்கள் என பிரமாண்டத்தின் ஒரு பகை வறட்டு பூரிப்பில் திளைத்து இருப்பது சிந்து சமவெளி நாகரிகத்தின் இன்றைய அமலாக்க இந்திய மத்திய தொல்லியல் துறை ;

அப்படியாகப்பட்ட மா சாம்ராச்சியம் படைத்த சிந்து சமவெளி நாகரிகத்தில் சிந்து நதித் துறையின் குயவு தொழில் பேட்டைகள், குடியிருப்புகள் & பிற தவிர்த்து மேலும் பல பண்டைய குலங்கள் அவரவர் வட்டாரம் , வட்டம் , சட்டம் / சட்டகம் , கூட்டம் (KHODULA) கொண்டு தனித்த தனித்தன்மை ஆளுமை , மகத்துவம் , அரசு , பேரரசு கண்டவர்கள் ; அத்தகு பல பண்டைய குலத்து மக்களின் வல்லமைகளும் பேராண்மைகளும் Mahājanapadas என்று மதி நுட்பத்துடன் , நுணுக்கத்துடன் மறைக்கப்பட்ட சரித்திரம் சுமந்தது இந்திய வரலாறு. https://en.wikipedia.org/wiki/Mahajanapadas
இன்றைய நம் இந்தியாவில் ...
மாநிலத்துக்குள் இனம் ;
இனத்துக்குள் மொழி ;
மொழி எனப்படுவன பல .
ஆனால் ...
அன்றைய பாரதம் எனும் இந்தியாவில் ..
KHODULA - கூட்டம் - குலம் - சட்டகம் ஆகிய வாழ்வியலில் ...
வட்டாரத்துக்குள் வட்டம்
வட்டத்துக்குள் குலம்
குலத்துக்குள் தொழில்
தொழிலுக்குள் இனம்
இனத்துக்கு மொழி
மொழியில் .... ஒரே மொழி தமிழ் மொழி.
வாழ்க்கை எளிதானது ; மனம் இலகுவானது ; புரிந்து கொண்டால் முன்னது இலகுவாகிவிடும் மற்றது இலேசாகிவிடும்.
-சற்குரு சக்கி வாசுதேவ்
ஆனால் ...
எல்லாம் இங்கு படாடோபம் , பகட்டு , ஆடம்பரம் , பெருமை , தற்பெருமை , பூரிப்பு , களேபரம் , ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் உலகமயம் , தாராளமயமாக போகப்பட விரும்பப்படுவதால் இழக்கப்படுவதாக இருப்பது உன்னதம் மற்றும் மகத்துவம் ...
அன்று பாகிசுதான் சொந்தம் ; இன்று சொந்தமில்லை ...
இன்று சிந்து வெளி சொந்தம் ; நாளை சொந்தமாக இருக்குமா ? .
எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாமல் போகப் போகிறோமா ? ; சொந்தமான ஒன்று சொந்தம் இல்லாமல் போனால் என்னாகும்..?

நன்றி  சிந்து வெளி குயவர்  பண்பாட்டு  நகரம் facebook pag

 

No comments: