குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Sunday, August 17, 2014

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் 4ம் ஆண்டு வி















நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் 4ம் ஆண்டு விழா பாளையில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர் முருகானந்தவேளார் தலைமை வகித்தார். மாநில தலைவர் சேமநாராயணன், தொழிலதிபர் கோபால்சாமி, ஊர்க்காடு பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 148 மாணவ, மாணவிகளுக்கும், 53 ஏழை குலாலர் சமுதாய மாணவி, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. அறக்கட்டளை அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, தச்சை சுடலைமுத்து, பாலாமடை அய்யப்பன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முன்னதாக சங்கரநாராயணன் வரவேற்றார். ஆசிரியர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.

No comments: