குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, November 16, 2015

குலாலர் சமூகத்தினரைபழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை





சமூகப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ள குலாலர் (மண்பாண்டத் தொழிலாளர்) சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்டார குலாலர் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கே. அப்பாவு தலைமை வகித்தார். டி.எம். சக்திவேல் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் வி. தியாகராஜன், மாநில துணைத் தலைவர் கே.பி. கலியபெருமாள், மாநில துணைத் தலைவர் கோ. கருப்புசாமி, தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் பி. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: