குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, February 15, 2013

குலாலா பேரவை தொடக்கம் kulala


     

      குலாலா பேரவை தொடக்கம்



                தருமபுரியில் மாவட்ட குலாலா பேரவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்ற விழாவுக்கு அந்தப் பேரவையின் மாவட்டத் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
 மாநில துணைத் தலைவர் எஸ்.மாணிக்கம், மாவட்டச் செயலாளர் எஸ். சுகுமாரன், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் கே.பழனிமுருகன், கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வுப் பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 நிகழ்ச்சியில் பங்கேற்றோர் குலாலா சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறப்புப் பெறுவது குறித்தும், அதிக மதிப்பெண்கள் பெறுவதும் குறித்தும், திறமைகளை வளர்ப்பது குறித்தும் வலியுறுத்தினர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.