குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, July 8, 2014

மண்பாண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு

மண்பாண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு ஜூலை 10ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக் காலங்களில் தமிழக அரசால் பராமரிப்புத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்வாரிய அலுவலர், தொழிலாளர் நல அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வருகிற ஜூலை 10ஆம் தேதி வரை களஆய்வு செய்து மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கிட உள்ளனர்.

இந்த திட்டத்தின்கீழ் மண்பாண்ட தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த நபர்கள், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த மண்பாண்ட தொழில் செய்யும் உறுப்பினர்கள், இதர மண்பாண்ட தொழில் செய்வோர் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த தொழிலாளர் நல அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: