குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, July 8, 2014

அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள மழைக் கால நிவாரணத் தொகையை வயது வித்தியாசமின்றி அனைத்து மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று, அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம், குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச் சங்க மாநிலப் பொதுக் குழு ஆலோசனை கூட்டம் வளையப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிவம் வரவேற்றார்.

நிறுவனத் தலைவர் தியாகராஜன், மாநிலத் தலைவர் ஆறுமுகம், மாநில நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிச்சை, வைரப்பெருமாள், ராதாகிருஷ்ணன், மாவட்டத் தொழில்சங்கத் தலைவர் சரவணன், கலிங்கசெல்வம், பரமசிவம், இலக்கிய அணித் தலைவர் பிரபு, மணிகண்டன், கலைவாணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

இதில், மண்பாண்டத் தொழிலாளர் நலன் கருதி மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் அந்தத் தொகையை வயது வித்தியசமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்பாண்டம், செங்கல், ஓடு, மண் மொம்மைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு இலவசமாக 80 யூனிட் களிமண் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ஏழூர் அகரம், அரூர், பிடாரமங்களம், செல்லிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் களிமண்களை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டப் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

No comments: